Skip to main content

Posts

Showing posts with the label பயணம்

தென் தொண்டை ரைட் டிச 24, 2016 (திருக்கழுகுன்றம், ஒரகடம், பொன் விளைந்த களத்தூர்)

பயண திட்டமிடல்கள் சில நாட்களாக நடந்துக்கொண்டு தான் இருந்தது. சென்ற முறை பாலாற்றின் கரையோரம் பயணத்தில் இருக்கும்பொழுதே திருக்கழுகுன்றத்தை பார்த்துவிட தோன்றியது. அதனால் இம்முறை திருக்கழுக்குன்றம் செல்லலாம் என்று முடிவெடுத்தேன். ஆனால் உண்மையில் இதற்கு முன்னர் செஞ்சி கோட்டையை தான் காணவேண்டும் என வெள்ளி வரை நினைத்திருந்தேன். தற்செயலாக செஞ்சியை பற்றி நண்பர் ஒருவரின் கட்டூரையை படிக்க நேர்ந்தது. அப்பொழுது அங்கு குரங்கு கூட்டம் அதிகமாக இருக்கும் – அவை சாதாரண குரங்கல்ல ஆக்ரோஷம் நிறைந்தது என்று அவர் எழுதியிருந்தார். ஒருமுறை எச்சிலை விழுங்கிக்கொண்டேன். சென்ற முறை என்னோடு பயணித்த பிரவீனும் மாத கடைசி என்று சொல்லி நழுவிக்கொள்ள, பல நாட்களாக எதிர்பார்த்திருந்த நவீனும் சென்னை வரமுடியாமல் போக – வேறு வழியின்றி நான் ப்ளான் பி ஆக வைத்திருந்த திருக்கழுகுன்றம் நோக்கி பயணிக்க முடிவு செய்தேன். திருக்கழுகுன்றம். சிவகாமியின் சபதம் படித்ததில் இருந்தே இந்த ஊரில் மீது ஒரு ஈர்ப்பு. வாதாபியை தீயில் பொசுக்க நரசிம்மனின் சைன்யம் இங்கிருந்து தான் தொடங்கியதாக அதில் கல்கி குறிப்பிட்டிருப்பார். அந்த சைன்யத்தை அவர் வ...

புல்லட் ரைட் - சோழ தேசம் - தஞ்சை/கங்கை கொண்ட சோழம் - பகுதி 5

தஞ்சை! உலகமே வியக்கும் ஒரு கட்டிட திறன்.எந்த வித நிலைக்கால பயன்பாடு இயந்திரங்களும் அல்லாது கட்டப்பட்ட பிரம்மாண்டம் அன்று என் கண் முன்னே விரிந்து நின்றது. அழகிய கோவில். நான் கண்ட மற்ற கோவிலை காட்டிலும் இங்கு கூட்டம் நிறை. வண்டியை நிறுத்திவிட்டு ஒவ்வொரு வாயிலாக கடக்கும்போதே ரோமங்கள் சிலிர்த்துக்கொண்டு நின்றது எனக்கு. அத்தனை குடும்பங்கள். அத்தனை சந்தோசங்கள். அத்தனை கூட்டத்திலும் நிம்மதியாக சுவாசிக்கவும், சிரிக்கவும் முடியும் உங்களால். இது பல கோவில்களில் கிடைப்பது இல்லை. நான் கடந்து செல்லும் ஒவ்வொரு மனிதனும் அந்த வானுயர் கோபுரத்தை உயர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான். நான் கடந்து சென்றேன். அந்த புல் தரையில் சென்று அமர்ந்தேன். திருப்புறம்பிய போரில் விஜயாலயனும் ஆதித்தனும் பிற்கால சோழருக்கு அடித்தளம் அமைத்ததை பார்த்தோம். ஆதித்தனுக்கு பிறகு அவன் மகன் பராந்தகன் இன்னும் சோழத்தை சிறப்புறச்செய்ய அதன் பின் அவன் மகன் கண்டராதித்தன் ஆட்சி பொறுப்பேற்கிறான். மற்றவர்களை போல அல்லாது இவன் சிவப்பணியில் அதிக நாட்டம் கொண்டமையால் சில ஆண்டுகளே ஆட்சி புரிந்து பிறகு தன் தம்பியாகிய அரிஞ்சயனிடம் ஆட்சியை கொடு...

புல்லட் ரைட் - சோழ தேசம் - தாராசுரம் - பகுதி 4

வேகமாக சென்ற என் வண்டி நின்ற இடம் தாராசுரம்…! சோழர்களின் கலை பொக்கிஷங்களாக கருதப்படுவது மூன்று கோவில்கள். 1.     தஞ்சை பெரிய கோவில் 2.     கங்கை கொண்ட சோழபுரம் மூன்றாவது தாராசுரம் – ஐராவதீஸ்வரர் கோவில். சோழர்களின் அழியாத பெருங்கோவில்கள் என இதை சொல்வதுண்டு. கட்டிய காலம் பார்க்கையில் தாராசுரம் கோவில் தான் சமீபத்திய கோவில். பன்னிரெண்டாம் நூற்றாண்டில் இரண்டாம் இராசராசனால் கட்டப்பட்ட ஒரு கலை களஞ்சியம். நீங்கள் சிற்பத்தின் அழகை ரசிக்க வேண்டுமா இங்கு தான் உங்களது முதல் அடி இருக்க வேண்டும். வெறும் ஒற்றை அங்குளத்தில் அவ்வளவு அழகான சிற்பங்கள், கதைகள் என ஒரு நாள் கண்டிப்பாக போதாது இந்த கோவிலின் அழகை ரசிக்க. முன்னமே சென்றிருந்தமையால் நான் விரும்பும் இடங்களை மட்டும் சென்று பார்த்துக்கொண்டேன்.  சோழரின் நேரடி வழி ஆளுமை கங்கை கொண்ட சோழபுரத்தை தலைமை இடமாக கொண்டு ஆண்ட, கங்கை வரை வென்று இக்கால இந்தோனேஷியாவையும் வென்று உலகிற்கே தமிழனின் பெருமையை நிலைநாட்டிய மன்னன் இராசேந்திர சோழனின் மகன் வழி பேரன் அதிராசேந்திர சோழனோடு நிறைவடைகிறது.  அடுத்து...

புல்லட் ரைட் - சோழ தேசம் - திருவலஞ்சுழி- பகுதி 3

விஜயாலயன் அடித்தளம் அமைக்க, ஆதித்யனின் பராகிரமத்தால் மீண்டெழுந்த சோழ அரசு காலம் கடக்க கடக்க இன்னும் விஸ்வதரித்துக்கொண்டே சென்றது. அது உச்சக்கட்டத்தை அடைந்தது நாம் போற்றி இன்றுவரை தலையில் வைத்து கொண்டாடும் இராஜராஜசோழன் காலத்தில் தான். வடக்கு, தெற்கு, மேற்கு என்று எல்லா திசைகளிலும் கொடிக்கட்டி பறந்தான். இவனது மகன் இராசேந்திரன் இன்னும் கடல் கடந்து கிழக்கையும் ஆண்டான் என்னும் பெருமை இருப்பினும் இராஜராஜசோழன் இன்று வரை எல்லோர் மனதிலும் குடிக்கொண்டிருக்க காரணம் அவன் ஆண்ட விதமும், அவன் செயல்பாட்டு திறனும் தான். அவன் அரசியல் காரணங்களுக்காக பல திருமணங்கள் புரிந்திருந்தாலும் அவனது ஆட்சியில் பட்டத்து அரசியாய் இருந்தவள் உலகமாதேவி தான். மக்கள் நலம், எல்லை விரிவமைப்பு, பாதுகாப்பு என்று பல சிந்தைகள் இருப்பினும் இராஜராஜன் கோவில்களின் மீதுக்கொண்டிருந்த பற்று என்றும் குறைவில்லை. அதற்கு விண்ணைத்தொட்டு நிற்கும் தஞ்சை கோவில் ஒரு சாட்சி. அது மட்டமல்லாது அவனது ஆட்சிகாலத்தில் இன்னும் பல கோவில்களை செப்பனிடுவதும், தானம் வழங்குவதும் செய்துவந்தான். இதை அவனது மனைவிமார்களும் செய்து வந்தனர். அப்படி உலகமாதேவி...

புல்லட் ரைட் - சோழ தேசம் - திருப்புறம்பியம் - பகுதி 2

திருப்புறம்பியம்..! முற்கால சோழருக்கு பிறகு சோழர் இருந்த இடங்களுக்கான அடையாளமே கிடைக்காமல் போக – களப்பிரர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள் என தமிழகம் சோழ அடையாளத்தை இழந்து நின்ற சமயம். முற்கால சோழரின் தலைநகரான உறையூரை கடந்துவிட்டு சோழர்கள் குறுகி கிடந்தார்கள். விஜயாலய மன்னன் ஒரு குறுநில மன்னனாக இருந்த சமயம். வடக்கே பல்லவரும், தெற்கில் பாண்டியர்களும் சீறும் சிறப்புமாய் இருந்த நேரம்.  பாண்டியனும் பல்லவனும் தங்கள் பெருமையை நிலைநாட்ட முட்டிக்கொண்டிருந்த சமயம் அவ்வபோது போர் மூண்டுக்கொண்டிருந்தது. போர் முற்றி உச்சக்கட்டம் நின்ற சமயம். பாண்டிய மன்னன் வரகுணவர்மனுக்கும் பல்லவன மன்னன் அபராஜிதவர்மனுக்கும் போர் மூல பல்லவனுக்கு நட்பாக இருந்த விஜயாலயன் தன் மகனை பல்லவருக்கு போர் செய்ய அனுப்புகிறான். வரலாறு காணாத ஒரு போர். ரதங்களும், யானைகளும், குதிரைகளும், காலாட்படைகளும் ஒன்றோடு ஒன்று முட்டி மோதிக்கொள்கின்றன. தமிழக வரலாற்றையே புரட்டி போடும் அளவுக்கு அது பெருமை வாய்ந்த போறாக அமைந்து போனது.  பொன்னியின் செல்வனில் கல்கி இந்த போரை பற்றியும் அதில் விஜயாலயனின் வீரத்தை பற்றியும் வெகுவாக பே...

புல்லட் ரைட் - சோழ தேசம் - பயணத்தின் தொடக்கம் - பகுதி 1

பயணங்கள்- என்றுமே நீங்கா காதல் கொண்டிருக்கும் ஒரு விடயம். அதுவும் பயணம் எனக்கு மிகவும் பிடித்த எனது பைக்கில் என்றால் கேட்கவா வேண்டும்? அதிகாலையிலே கிளம்பிவிட்டேன். கிளம்பும் முன் ஆயிரெத்தி எட்டு தடங்கல்கள் வீட்டில் இருக்கும் அத்தனை பேரும் தடுக்க அம்மாவின் ஒப்புதலோடு கிளம்பிவிட்டேன். தனியாக இந்த தூரம் என்னும் கவலை இல்லை. பரபரப்பு மட்டுமே இருந்தது.  வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன். தனியான பயணம். கையில் பண இருப்பு அதிகமில்லை. சிக்கனமாக இருக்கவேண்டும், வெயில் வேறு சில நாட்களாக வாட்டி எடுக்கிறது. உடம்பை ஹைட்ரேட்டடாகவே வைத்திருக்க வேண்டும். அங்கங்கே மரநிழல்களில் ஓய்வுகள் எடுத்துக்கொள்ள வேண்டும். முடிந்த வரை நிறைந்திருக்கும் சொந்தங்களின் வீட்டில் சாப்பாட்டை முடித்துக்கொள்வோம் என்று முடிவெடுத்து கிளம்பினேன். அதிகாலையிலே வீட்டில் சாப்பாட்டை முடித்துக்கொண்டேன். அடுத்த சில நிமிடங்களில் வண்டி NH 45ல் பறந்தது. அதிகாலை காற்று சில்லென்று வீச, மெதுவான பயணங்களையே மேற்க்கொண்டேன். எஸ்.ஆர்.எம்., கல்லூரியை கடக்கும்பொழுது எனது கல்லூரி காலங்கள் எல்லாம் கண்முன்னே வந்து போனது. நண்பர்களோடு நான...