Skip to main content

Posts

Showing posts from December, 2016

தென் தொண்டை ரைட் டிச 24, 2016 (திருக்கழுகுன்றம், ஒரகடம், பொன் விளைந்த களத்தூர்)

பயண திட்டமிடல்கள் சில நாட்களாக நடந்துக்கொண்டு தான் இருந்தது. சென்ற முறை பாலாற்றின் கரையோரம் பயணத்தில் இருக்கும்பொழுதே திருக்கழுகுன்றத்தை பார்த்துவிட தோன்றியது. அதனால் இம்முறை திருக்கழுக்குன்றம் செல்லலாம் என்று முடிவெடுத்தேன். ஆனால் உண்மையில் இதற்கு முன்னர் செஞ்சி கோட்டையை தான் காணவேண்டும் என வெள்ளி வரை நினைத்திருந்தேன். தற்செயலாக செஞ்சியை பற்றி நண்பர் ஒருவரின் கட்டூரையை படிக்க நேர்ந்தது. அப்பொழுது அங்கு குரங்கு கூட்டம் அதிகமாக இருக்கும் – அவை சாதாரண குரங்கல்ல ஆக்ரோஷம் நிறைந்தது என்று அவர் எழுதியிருந்தார். ஒருமுறை எச்சிலை விழுங்கிக்கொண்டேன். சென்ற முறை என்னோடு பயணித்த பிரவீனும் மாத கடைசி என்று சொல்லி நழுவிக்கொள்ள, பல நாட்களாக எதிர்பார்த்திருந்த நவீனும் சென்னை வரமுடியாமல் போக – வேறு வழியின்றி நான் ப்ளான் பி ஆக வைத்திருந்த திருக்கழுகுன்றம் நோக்கி பயணிக்க முடிவு செய்தேன். திருக்கழுகுன்றம். சிவகாமியின் சபதம் படித்ததில் இருந்தே இந்த ஊரில் மீது ஒரு ஈர்ப்பு. வாதாபியை தீயில் பொசுக்க நரசிம்மனின் சைன்யம் இங்கிருந்து தான் தொடங்கியதாக அதில் கல்கி குறிப்பிட்டிருப்பார். அந்த சைன்யத்தை அவர் வ...

புல்லட் ரைட் - சோழ தேசம் - தஞ்சை/கங்கை கொண்ட சோழம் - பகுதி 5

தஞ்சை! உலகமே வியக்கும் ஒரு கட்டிட திறன்.எந்த வித நிலைக்கால பயன்பாடு இயந்திரங்களும் அல்லாது கட்டப்பட்ட பிரம்மாண்டம் அன்று என் கண் முன்னே விரிந்து நின்றது. அழகிய கோவில். நான் கண்ட மற்ற கோவிலை காட்டிலும் இங்கு கூட்டம் நிறை. வண்டியை நிறுத்திவிட்டு ஒவ்வொரு வாயிலாக கடக்கும்போதே ரோமங்கள் சிலிர்த்துக்கொண்டு நின்றது எனக்கு. அத்தனை குடும்பங்கள். அத்தனை சந்தோசங்கள். அத்தனை கூட்டத்திலும் நிம்மதியாக சுவாசிக்கவும், சிரிக்கவும் முடியும் உங்களால். இது பல கோவில்களில் கிடைப்பது இல்லை. நான் கடந்து செல்லும் ஒவ்வொரு மனிதனும் அந்த வானுயர் கோபுரத்தை உயர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான். நான் கடந்து சென்றேன். அந்த புல் தரையில் சென்று அமர்ந்தேன். திருப்புறம்பிய போரில் விஜயாலயனும் ஆதித்தனும் பிற்கால சோழருக்கு அடித்தளம் அமைத்ததை பார்த்தோம். ஆதித்தனுக்கு பிறகு அவன் மகன் பராந்தகன் இன்னும் சோழத்தை சிறப்புறச்செய்ய அதன் பின் அவன் மகன் கண்டராதித்தன் ஆட்சி பொறுப்பேற்கிறான். மற்றவர்களை போல அல்லாது இவன் சிவப்பணியில் அதிக நாட்டம் கொண்டமையால் சில ஆண்டுகளே ஆட்சி புரிந்து பிறகு தன் தம்பியாகிய அரிஞ்சயனிடம் ஆட்சியை கொடு...